மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 6


காங்கிரஸ் அரசு விடுதலைக்குப் பிறகு எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே இந்திய முதலாளி வர்க்கத்தின் நலன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் எடுக் கப்பட்டவையே என்பதை நமது கட்சி திட்டம் எடுத்துரைக்கிறது.

இந்தியாவில், இயற்கை வள ஆதாரம் மட்டுமின்றி மனித வள ஆதாரமும் நிரம்பியுள்ளது. இவற்றை கொண்டு மக்கள் வாழ்க்கையை வளப்படுத்து வதற்குப் பதிலாக அரசு அதிகாரத்தைக் கைப் பற்றிய பெருமுதலாளிகள் தங்களின் குறுகிய சுயநலனை அடிப்படையாகக் கொண்ட முதலா ளித்துவ வளர்ச்சிப் பாதையை வகுத்துக் கொண்ட னர். அவர்கள் அந்நிய ஏகபோகத்துடன் வலுவான இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு நிலப்பிரபுக் களுடன் அதி காரத்தைப் பங்கிட்டுக் கொண்டனர்.

விடுதலைக்குபிறகு இந்தியா முதலாளித்துவம் தொழில் வளர்ச்சிக்காக பிரிட்டிஷ், அமெரிக்க ஏகாதிபத்தியங்களை அணுகியது. ஆனால் அவர் கள் இந்தியாவை தங்களின் இளைய பங்காளி யாக வைத்துக் கொள்ளவே முனைந்தனர். எனவே, சோவியத் முகாமில் உதவியை இந்தியா நாடியது. கனரகத் தொழில்கள், ஐந்தாண்டு திட்டங்கள் போன்றவற்றை இந்திய ஆளும் வர்க்கம் செயல்படுத்தியது என்றாலும், அத்தகைய முன்முயற்சிகள் ஆளுவர்க்கத்தை வலுப்படுத்திக்கொள்ளவே எடுக்கப்பட்டன. இது நாடுவிடுதலைபெற்ற 20 ஆண்டுகளுக்கு உள்ளா கவே தெளிவானது.

மேலும் இந்திய பெருமுதலாளித்துவம் தனது நேச கத்தியான நிலப்பிரபுத்துவத்தின் நலன் களைக் காப்பாற்றும் வகையில் உண்மையான நிலச் சீர்திருத்தத்தை நிறைவேற்றவில்லை. இதன் விளைவாக இந்தியாவின் சந்தை விரிவடைய வில்லை. அன்றைய திட்டமிட்ட பொருளாதாரம் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தனர். நிதி ஆதாரங் களை இந்திய முதலாளித்துவம் தங்களுக்கு உகந்த வகையில் பயன்படுத்த முற்பட்டனர். வங்கி, காப்பீட்டுத் துறை போன்ற நிதித்துறை தேசிய மயமாக்கப்பட்டதன் மூலம் இவற்றின் பெரும் பாலான கடன் வசதிகளை பெருமுதலாளிகளே பயன்படுத்திக் கொண்டனர்.
சோவியத் உதவி மற்றும் சமூகக்கட்டுப் பாட்டிற்கு வழிவகுக்க அரசு பொதுத்துறை போன்றவற்றால், ஒரளவு இந்தியாவில் தொழில் மயமாக்கலில் முன்னேற்றம் இருந்தது. ஆனால் இவற்றால் முதலாளித்துவ சக்திகளே பெருமளவு பலன்பெற்றன. இவ்வாறு வலுப்பெற்ற பெரு முதலாளிகள் 1980களின் மத்தியில அரசிற்கென அதுவரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கேந்திரத் தொழில்களில் நுழையவும், பொதுத்துறை நிறு வனங்களை தாங்களே எடுத்துக் கொள்ளவும், அந்நிய மூலதனத்துடன் சேர்ந்து புதிய பகுதி களில் விரிவடையவும் முயற்சி செய்தனர்.

சோவியத் யூனியன் சிதறுண்டு போனதைத் தொடர்ந்து மாறிய சர்வதேச நிலைமையில் 1991 முதல் தொடர்ந்து வந்த அரசுகள் தாராளமய மாக்கல், கட்டமைப்பை சீரமைக்கும் கொள்கை களை மேற்கொண்டு அந்நிய மூலதனத்திற்கு இந்தியப் பொருளாதாரம் திறந்து விடப்பட்டது. பொதுத்துறையை சீர்குலைக்கும் பணி துவங் கியது. அவற்றை அழித்து விடும் நோக்கத்தோடு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனி யாருக்கும் ஏகபோக நிறுவனங்களுக்கும் மலிவு விலையில் விற்கப்பட்டன.
இதே போன்று நிதித்துறையையும் திறந்து விடுமாறு சர்வதேச நிதி மூலதனம் தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்தது. வங்கித் துறையை தனியார் மயமாக்குதல், காப்பீட்டுத் துறையை திறந்து விடுதல் ஆகியவற்றுக்கு முன்னு ரிமை அளிக்கப் பட்டது. 1994-ல் காட் ஒப்பந்தத் தில் இந்தியா கையெழுத்திட்ட பிறகு உலக வர்த் தக அமைப் பின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய தாயிற்று. காப்புரிமை சட்ட மாற்றங் கள், சேவைத் துறைகள் அந்நிய மூலதனத்திற்குத் திறந்து விடப் பட்டன. இவை ஏகாதிபத்திய மூலதனத்தின் நலன் களுக்கே உதவி செய்துள்ளன. இவை அனைத் துமே இந்தியாவின் பொருளா தார இறையாண் மையை பாதித்துள்ளன.
தாராள மய, தனியார் மயப் பாதை பெருமுதலாளி களுக்கு எண்ணற்ற பலன்களைத் தந்துள்ளது. புதிய வர்த்தக நிறுவனங்கள் உருவாகி, அவை பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக விரிவடைந்து உள்ளன.

2014ஆம்ஆண்டில், ஒரு சதவீதத்தினராக மட்டுமே இருக்கும் பெரும் செல்வந்தர்கள் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 49 சதவீத சொத்தை தங்கள் வசம் வைத்திருந்தனர் எனில், 2016ஆம் ஆண்டில் மோடியின் அரசு தாராளமயக் கொள்கைகளை தீவிரமாகச் செயல்படுத்திய பிறகு அவர்களின் சொத்து மதிப்பு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 58.4 சதவீதமாக, அதாவது இரண்டே ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10 சதவீதம் உயர்ந்து அவர்களுக்கு செழிப்பை ஏற்படுத்தியது.

உலக மயமாக்கல் கொள்கைகள் இந்தியாவின் இறை யாண்மையை பல்வேறு வழிகளில் பலியிடு வதாகவும் மாற்றியுள்ளன என்பதை 2000-ல் மேம் படுத் தப்பட்ட கட்சி திட்டம் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தது.



Leave a comment